அரசு மருத்துவமனையில் டாக்டரை தாக்கியவர் கைது
பந்தலுார்; பந்தலுார் அரசு மருத்துவமனையில் டாக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.பந்தலுார் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர், முகமது யாசிர்,46, தேவாலா போலீசில் கொடுத்த புகார் மனு:நான் கடந்த இரு நாட்களுக்கு முன் பணியில் இருந்த போது இரவு, 12:00 மணிக்கு, மருத்துவமனைக்கு நல்லேந்திரன் என்பவர் வந்தார். அவர், 'தனது மகன் பிரசாந்த் குமார் என்பவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். உரிய சிகிச்சை அளிக்க முடியாவிட்டால், ஊட்டி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்,' என கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரை சமாதானப்படுத்த முயன்ற போது, முதுகில் தாக்கியதில் மன உளைச்சல் ஏற்பட்டு அதே மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெறுகிறேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான போலீசார், மனு குறித்து விசாரணை செய்து, டாக்டரை தாக்கிய பெருங்கரை பகுதியை சேர்ந்த நல்லேந்திரன்,49, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.