உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அகலம் குறைந்த நடைபாதை: மக்கள் அதிருப்தி

அகலம் குறைந்த நடைபாதை: மக்கள் அதிருப்தி

கூடலுார்; கூடலுார் நகரில் சீரமைப்பு பணி நடந்து வரும் நடை பாதையின் அகலம், குறைவாக இருப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயுடன் கூடிய, நடைபாதை சேதமடைந்துள்ளது. அதில், 450 மீட்டர் துாரம் சீரமைக்க, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம், 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி அக்., மாதம் துவங்கப்பட்டது. இதற்காக, முதல் கட்டமாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடைபாதை அகற்றப்பட்டு, புதிய நடைபாதை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டது.இப்பணிகளை கூடுதல் கலெக்டர் கவுசிக் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மறு திட்ட மதிப்பீடு செய்து பணிகளை துவங்க உத்தரவிட்டார். தொடர்ந்து, தற்போதுள்ள கழிவு நீர் கால்வாயை சேதப்படுத்தாமல், அதனை சற்று உயர்த்தி, அதன் மீது நடை அமைக்க, 38 லட்சம் ரூபாய்க்கு திட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

அகலம் மூன்று அடி

இந்நிலையில், 'நடைபாதையின் அகலம், மூன்று அடியாக இருப்பதால், மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படும்,' என, மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அதற்கான நடவடிக்கை இல்லாத நிலையில், தற்போது, 3 அடி அகலத்தில் நடைபாதை அமைத்து வருகின்றனர். வியாபாரிகள் கூறுகையில், 'நடைபாதை சீரமைக்கப்பட்ட பின், அதன் ஒரு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் இரும்பு பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்படும். இதன் மூலம் நடைபாதை அகலம் மேலும் குறைந்து, மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படும். இதனை தவிர்க்க, நடைபாதையை, 5 அடியாக அகலப்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை