உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவேகானந்தர் ஜெயந்தி விழா குருகுலம் மாணவர்கள் பங்கேற்பு

விவேகானந்தர் ஜெயந்தி விழா குருகுலம் மாணவர்கள் பங்கேற்பு

ஊட்டி : கோவையில் நடந்து வரும் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழாவில், ஊட்டி அகலார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று விபரங்களை சேகரித்தனர்.கோவை ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா கண்காட்சி நடந்து வருகிறது. ஊட்டி அகலார் குருகுலம் பள்ளி மாணவர்கள் 100 பேர் அழைத்து செல்லப்பட்டு விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, அவரின் ஞான மொழிகள் குறித்து அறிந்து கொண்டனர். மேலும் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டனர். பள்ளி முதல்வர் வாசுகி அர்ஜுணன், ஆசிரியைகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயாவில் அமைந்துள்ள விவேகானந்தர் பூங்கா மற்றும் ராமாயண பூங்காவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்