மேலும் செய்திகள்
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்
29-Mar-2025
கூடலுார்,: நீலகிரி மாவட்டம், கூடலுார் கோட்ட ஆய அலுவலராக பணியாற்றி வருபவர் சித்தராஜ், 54. இவர், மண்வயல் கோழிகண்டி பகுதியில் நேற்று முன்தினம், நாட்டுக்கோழி முட்டை வாங்குவதற்காக சென்றுள்ளார்.அங்கிருந்த, 42 வயது பெண், 'தற்போது முட்டை இல்லை,' என, தெரிவித்துள்ளார். அப்போது சித்தராஜ், திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து தொல்லை செய்துள்ளார். பெண்ணின், சப்தம் கேட்டு உறவினர்கள் வருவதை பார்த்த சித்தராஜ், அங்கிருந்து தப்பியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண், புகார் அளித்தார். கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, சித்தராஜை நேற்று கைது செய்தனர். இச்சம்பவம், வருவாய் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29-Mar-2025