சாலையோரம் இறந்து கிடந்த நபர் குறித்து - போலீஸ் விசாரணை
பந்தலுார்; பந்தலுார் அருகே குந்தலாடி சிவன் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம்,52. இவர் பெக்கி என்ற இடத்தில் உள்ள, தனியார் தோட்டத்தில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை 'பாக்கனா கேட்' என்ற இடத்தில் சாலை ஓரம் அவரின் உடல் கிடந்துள்ளது.இதுகுறித்து, நெலாக்கோட்டை போலீசார், வனத்துறை மற்றும் பந்தலுார் வருவாய் துறைக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, உடலை ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் கூறுகையில்,'ராஜரத்தினம் சந்தேகம் எழும் வகையில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர், அது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.