ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு கூட்டம்
கோத்தகிரி; தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 12ல் நடக்கிறது.அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 12ம் தேதி, காலை, 11:30 மணியளவில், நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.தபால் துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின், கடிதம் மூலமாக அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஊட்டி, 643001 என்ற முகவரிக்கு, வரும், 8ம் தேதிக்குள் சேர்ப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.