வினாடி-வினா போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ஊட்டி; தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் ஊட்டி அடுத்த அணிக்கொரை அரசு பள்ளியில் வினாடி வினா போட்டி நடந்தது. இந்த போட்டியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அணிக்கொரை அரசு பள்ளியை சேர்ந்த,11ம் வகுப்பு மாணவி ரிக்சிதா, 9ம் வகுப்பு மாணவர் பாலாஜி ஆகியோர், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். பின், சென்னையில் நடந்த வினாடி வினா போட்டியில், மாநிலத்தில் இருந்து, 28 மாவட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர். அணிக்கொரை அரசு பள்ளி மாணவி ரக்சிதா, மாணவர் பாலாஜி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்று அசத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அணிக்கொரை அரசு பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.