உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவி தொகை

அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவி தொகை

ஊட்டி : தமிழ் அறிஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தமிழ் அறிஞர்களுக்கு, அவர்கள் வாழும் காலம் வரை தமிழ் திருப்பணியில், தொய்வின்றி ஈடுபடும் வகையில், மாதந்தோறும், 3,500, மருத்துவ படி, 500 என, 4,000 ரூபாய், அரசு பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணம் சலுகை வழங்கப்படுகிறது. தமிழ் அறிஞர்களின் மறைவுக்கு பிறகும், அவரின் மரபுரிமையருக்கு அவர்தம் வாழ்நாள் முழுவதும், 2,500 மற்றும் மருந்து படி, 500 என வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற முதிர்ந்த தமிழ் அறிஞர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் உரிமைத்தொகை, சமூக நல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற மாநில அரசின் வேறு எந்த திட்டங்களின் வாயிலாக உதவி தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பிக்க தகுதிகள், 2024, ஜன, 1ம் தேதியன்று, 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பதுடன், தாலுகா அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று இணைக்கப்பட வேண்டும். தமிழ் பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரை சான்று, இரண்டு தமிழ் அறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், ரேஷன்கார்டு, மரபுரிமையர் கணவன், மனைவி இருப்பின், அவரது ஆதார் அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்தை, மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை வலைத்தளத்திலோ www.tamilvalarchithurai.tn.gov.inகட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், அக்., 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை