மேலும் செய்திகள்
62வது மலர் கண்காட்சிக்கு பிரையன்ட் பூங்கா தயார்
07-Dec-2024
ஊட்டி ,; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணி நடந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மலர் கண்காட்சிக்காக பூங்காவில் இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை, மலர் மாடங்களில், 5 லட்சம் மலர்கள் தயார்படுத்தி காட்சிப்படுத்துவது வழக்கம். இந்நிலையில், வரும் மே மாதம் நடக்க உள்ள மலர் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவு செய்ய தற்போது விதை சேகரிப்பு பணி நடந்து வருகிறது. மேலும்,'பென்சீனியம், மேரிகோல்டு, பெட்டூனியம் மற்றும் சால்வியா' உட்பட பல்வேறு மலர் செடிகளில் விதைகள் சேகரிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் பீபிதா கூறுகையில்,''அரசு தாவரவியல் பூங்காவில், மே மாதம் நடக்க உள்ள மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. ''முதற்கட்டமாக விதைகள் சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் விதைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். நாற்று உற்பத்தி செய்த பின், நடவு பணிகள் படிப்படியாக துவக்கப்படும்,'' என்றார்.
07-Dec-2024