உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய கருத்தரங்கம் நாளை துவக்கம்

தேசிய கருத்தரங்கம் நாளை துவக்கம்

சூலுார்;சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், டி.பி.டி., நட்சத்திர கல்லுாரி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்குபெறும் தேசிய கருத்தரங்கு, நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்திய உயிர் தொழில்நுட்பவியல் துறை விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களான விஞ்ஞானிகள் கரீமா குப்தா, மிஸ்ரா ஆகியோர் தலைமையில் நடக்கும் இக்கருத்தரங்கில், 15க்கும் மேற்பட்ட துறை வல்லுனர்கள், 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து முதல்வர்கள், அறிவியல் அறிஞர்கள் பங்கேற்கின்றனர். கல்லுாரி மேலாண் அறங்காவலர் செந்தில் கணேஷ் கருத்தரங்கை துவக்கி வைக்க உள்ளார். தாளாளர் வித்யாலட்சுமி, செயலர் சாரம்மா, முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை