உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் அருகே அபாய நிலையில் மரங்கள்

குன்னுார் அருகே அபாய நிலையில் மரங்கள்

குன்னுார்: 'வெலிங்டன் லுார்துபுரம் பகுதியில் வீடுகள் மீது விழும் ஆபத்தான கற்பூர மரங்களை அகற்ற வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் கனமழையால் மரங்கள் விழுகிறது. கடந்த, 2ம் தேதி பேரக்ஸ் பகுதியில் ராட்சத மரம் விழுந்து காரில் வந்தடிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து 'டிபன்ஸ் எஸ்டேட்' மற்றும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, 206 மரங்கள் வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்திற்கு உட்பட்ட, லுார்துபுரம் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள கற்பூர மரங்களை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மரங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளின் மீது விழுந்தால் ஐந்து குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், இவ்வழியாக ராணுவ அதிகாரிகளின் வாகனங்களும் வருவதால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, ராணுவ பகுதியில் இந்த மரங்களை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ