மேலும் செய்திகள்
பெண் யானை பலி; வனத்துறை விசாரணை
25-Dec-2024
ஊட்டி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அடுத்த எடக்காடை சேர்ந்தவர் சதீஷ், 38. தேயிலை தோட்ட கூலி தொழிலாளி.நேற்று மாலை தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சதீஷ் திரும்பவில்லை. வனவிலங்கு தாக்கி சதீஷ் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மஞ்சூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சதீசை தாக்கியது, சிறுத்தையா; கரடியா என்பது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
25-Dec-2024