உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

ஊட்டி; ஊட்டி அருகே வேலையில்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.ஊட்டி முள்ளிக்கொரை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 32. இவருடைய அண்ணன் பிரபு கார்பென்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டதால் சகோதரர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பால சுப்ரமணியத்திற்கு சரியான வேலை கிடைக்காததால் மனவிரக்தியில் இருந்தார்.இந்நிலையில், 15ம் தேதி பிரபு, ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது, பாலசுப்ரமணியம் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக பாலசுப்ரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊட்டி ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ