உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / விவசாயிகள் புள்ளி விபரம் தெரிவிக்க வேண்டுகோள்

விவசாயிகள் புள்ளி விபரம் தெரிவிக்க வேண்டுகோள்

பெரம்பலூர்: 'பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் விவசாயிகள் அடிப்படை புள்ளி விபரம் சேகரிக்க வரும் வேளாண் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விவசாயிகள் அடிப்படை புள்ளி விபரம் சேகரித்தல் தொடர்பாக மாவட்டம், வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இக்குழுவில் உள்ள உதவி வேளாண் அலுவர்கள் கிராமம், கிராமமாக வந்து புள்ளி விபரம் சேகரித்து வருகின்றனர். எனவே, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு வரும் உதவி வேளாண் அலுவலரிடம் முழு விபரங்களை அளித்து தங்களுடைய பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ