மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
41 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
41 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
42 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
43 minutes ago
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீரனுார் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்டடம் கட்டி முடித்து கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.கீரனூர் மேலபண்ணைக்குளம். கீழபண்ணைக்குளம், ஆத்திகுளம் உட்பட 10 மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமங்களில் முதலுதவி சிகிச்சைக்காகவும், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்காகவும் 15 கி.மீ., தொலைவில் உள்ள மேலக்கொடுமலுார் ஆரம்ப துணை சுகாதார நிலையம் சென்று வருகின்றனர். இதனால் வீண்அலைச்சல், பஸ் வசதி இல்லாத கிராமங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று 2021 -22ம் நிதி ஆண்டில் 15வது நிதிக்குழு மாநியத்தில் ரூ.30 லட்சத்தில் கீரனுாரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே துணை சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
41 minutes ago
41 minutes ago
42 minutes ago
43 minutes ago