உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத்திய அரசு சட்ட திருத்தங்களை கண்டித்து  அனைத்து தொழிற்சங்கங்கள்   ஆர்ப்பாட்டம் 

மத்திய அரசு சட்ட திருத்தங்களை கண்டித்து  அனைத்து தொழிற்சங்கங்கள்   ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம்: - மத்திய அரசின் சட்டத்திருத்தங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தொ.மு.ச., மாவட்ட பொதுச் செயலாளர் வின்சென்ட் அமலதாஸ் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் என்.கே.ராஜன், சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சண்முகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அரசின் 3 சட்டத்திருத்தங்களை கண்டித்தும், 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக திருத்தப்பட்டதை கண்டித்தும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு மத்திய அரசு மாற்றாந்தாய் போல் செயல்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை