உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் விசைப்படகு பராமரிப்பு பணிகள் மும்முரம்

ராமேஸ்வரத்தில் விசைப்படகு பராமரிப்பு பணிகள் மும்முரம்

ராமேஸ்வரம்:மீன் பிடி தடைக் காலத்தை பயன்படுத்தி ராமேஸ்வரத்தில் விசைப்படகுகளை பழுது நீக்கி பராமரிப்பு செய்யும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தில் ஏப்.15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் 1500 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டதால் மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கியுள்ளனர். தடைக்காலம் துவங்கி 18 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று முதல் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் விசைப்படகில் சேதமடைந்த பாகங்களை அகற்றி புதிய மரப்பலகைகள் பொருத்தி புதுப்பிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இனிவரும் நாளில் படகில் பழுதான இன்ஜின் உதிரி பாகங்களை புதுப்பித்தல், புதிய மீன்பிடி வலைகள் வடிவமைக்கும் பணி நடக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்