உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 3 பேர் கைது

வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 3 பேர் கைது

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் சூரன்கோட்டை பகுதியில் வளால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் பஜார் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.அப்போது சூரன்கோட்டை பகுதியில் வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது சூரன்கோட்டையை சேர்ந்த கஜேந்திரன் மகன் அபிேஷக் 24, நீண்ட வாளால் கேக் வெட்டி தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்.போலீசாரை பார்த்தவுடன் அனைவரும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் சூரன்கோட்டையை சேர்ந்த நிர்மல் 32, கார்த்திகேயன் 21, மணிகண்டன் 23, என தெரிய வந்தது. தப்பி ஓடிய அபிேஷக்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ