உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தென்னிந்திய போட்டிக்கு கல்லுாரி மாணவர் தேர்வு

தென்னிந்திய போட்டிக்கு கல்லுாரி மாணவர் தேர்வு

பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி மாணவர் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள் கைப்பந்து போட்டி பிப்.,24ல் இளையான்குடியில் நடந்தது. இதில் பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி இளங்கலை மூன்றாம் ஆண்டு உயிர் வேதியியல் துறை மாணவர் சரவணன் தேர்வு பெற்றார்.பிப்.,28 முதல் மார்ச் 4 வரை சேலம் பெரியார் பல்கலையில் நடக்க உள்ள தென்னிந்திய கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். மாணவரை உடற்கல்வி இயக்குனர் பிரசாத், கல்லுாரி முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ