உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகள் 2ம் போக நெல் விற்பதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

விவசாயிகள் 2ம் போக நெல் விற்பதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வசதிக்காக அச்சுந்தன்வயலில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது 2ம் போகமாக நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகையுடன் நெல்லை 'சன்ன ரகம் குவிண்டால் ரூ.2310, பொது ரகம் குவிண்டால் ரூ.2265விலைக்கு விற்கலாம்.நெல் கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து பட்டா நகல் மற்றும் சிட்டா நகல், வி.ஏ.ஓ., சான்று பெற்று விபரங்களை www.tncs.edpc.inஎன்ற இணையதளத்தில் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் உதவியுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நெல் கொள்முதலுக்கான பணம் செலுத்தப்படும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி