மேலும் செய்திகள்
கண்டெடுத்த பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
31-Aug-2024
பரமக்குடி: பரமக்குடி சி.எஸ்.ஐ., காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் செப்.8 இரவு 7:00 மணிக்கு ஓட்டப்பாலம் பகுதியில் பணம் கொண்டு சென்றார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்த நிலையில் ஏராளமானோர் கூட்டமாக சென்றுள்ளனர்.அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்தை வீட்டில் சென்று பார்த்த போது காணவில்லை. அப்பணத்தை ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி 83, கண்டெடுத்துள்ளார். அன்று டி.எஸ்.பி., அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்துச் சென்றார்.பணம் தொலைந்தது குறித்து போலீசில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். நேற்று டி.எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.ஐ., மோதிலால் முன்னிலையில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
31-Aug-2024