| ADDED : ஜூலை 02, 2024 10:32 PM
ராமநாதபுரம்: நேற்று ஆனி கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயிலில்காலையில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.இதே போல ராமநாதபுரம் குண்டுக்கரைசுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊருணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலதண்டயுத சுவாமி கோயில் மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலமுருகனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ரெகுநாதபுரம் அருகே வாணிசுயம்பு வேலாயுத சுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் நடந்த பூஜைகளில் ஏராளமானபக்தர்கள் பங்கேற்றனர்.