உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு

அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு

பெரியபட்டினம்: வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் கிஷோர் 492, மாணவி சுஷ்மா 490, ஜாசினி ஸ்ரீ 481 ஆகியோரை பள்ளி தாளாளர் பாண்டி, முதல்வர் உமாராணி, நிர்வாக அலுவலர் கதிரேசன்,பள்ளி நிர்வாகிகள் குப்பு சுவாமி, தியாகராஜன், வி.எம்.குப்புசாமி, பாக்கிய நாதன், சண்முகம், நாகராஜன், வேலு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ