உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சரவணக்குமார், மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். முதுநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும்.ஆசிரியர்களை கற்பித்தல் தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்