உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கட்டுப்படுத்தும் காவலர்களை கண்டு கொள்ளாத பயணியர்

கட்டுப்படுத்தும் காவலர்களை கண்டு கொள்ளாத பயணியர்

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணியர் ஆபத்தை உணராமல் கடலின் ஆழமான பகுதியில் குளித்தனர்.புனித தலமான ராமேஸ்வரம் கோவில், சுற்றுலாத் தலமான தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணியர் வாகனங்களில் வருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் மீனவர்கள் கூட நீந்திச் செல்ல அச்சப்படுவர்.காரணம் இங்கு எழும் அலைகள் கடற்கரையில் மண் அரிப்பை ஏற்படுத்தி மனிதர்களை கடலுக்குள் இழுத்துச் செல்லும் தன்மை உடையது. இதனால் தான் இந்த கடலுக்கு அரிச்சல்முனை என பெயர் ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று முன் தினம், தனுஷ்கோடி அரிச்சல்முனையில் குவிந்த சுற்றுலாப் பயணியர் ஆபத்தை உணராமல் அரிச்சல் முனையில் உற்சாகமாக குளித்து விளையாடினர். அவர்களை வெளியேறும்படி போலீசார் வலியுறுத்தியும் பொருட்படுத்தவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ