உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லாந்தையில் சுரங்கப்பாதை பணிகளை முடிக்க ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை

லாந்தையில் சுரங்கப்பாதை பணிகளை முடிக்க ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை

ராமநாதபுரம் ; ராமநாதபுரம் லந்தை கிராமம் அருகே ரயில்வே மேம்பால கட்டவும், மழைக்காலத்திற்குள் சுரங்கப்பாதை பணிகளை முடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடந்தது.மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமை வகித்தார். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ராவ், முதுநிலை கோட்ட பொறியாளர் கார்த்திக், முதுநிலை கோட்ட தலைமை பொறியாளர் சந்திப் பாஸ்கர், கட்டுமான பிரிவு உதவி பொறியாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் லாந்தை கிராம மக்கள் பங்கேற்றனர்.கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா பேசியதாவது:ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதையும் கிராம மக்களுக்கு முக்கியமாகும். பாதி கட்டி முடிக்கப்பட்ட சுரங்க பாதையில் கிராம மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மழை நீர் தேங்காமல் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஜூலை 9 மற்றும் 16 ஆகிய நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. ரயில்வே மேம்பாலம் கட்ட ஒப்பந்ததாரர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்காமல் இருக்க தண்ணீர் இறைக்கும் மோட்டார் ரூம், சுற்றுச்சுவர், இருபுறமும் கழிவு நீர் கால்வாய், கூரை போன்றவற்றை அமைத்தால் கிராம மக்களின் சிரம் குறைய வாய்ப்புள்ளது என்றார்.ஆனால் லாந்தை கிராம மக்கள் முதலில் மேம்பாலம் கட்டும் பணியை துவக்க வேண்டும். அதுவரை சுரங்கப்பாதை பணிகளை துவங்கக் கூடாது. சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கினாலும் அது பற்றி புகார் தெரிவிக்க மாட்டோம் என்றனர்.இருந்த போதிலும் கிராம மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுரங்கப்பாதை பணிகளை முடிக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை