உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ்சிற்குள் மழைநீர் பயணிகள் சிரமம்

பஸ்சிற்குள் மழைநீர் பயணிகள் சிரமம்

முதுகுளத்துார்: பரமக்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு சென்ற அரசு டவுன் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் சிரமப்பட்டனர்.முதுகுளத்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், விருதுநகர், கும்பகோணம், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாட்களாக மழை பெய்கிறது. இதையடுத்து ஒருசில அரசு பஸ்களில் மழை பெய்தால் பல இடங்களில் மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். இதனால் இருக்கையில் அமர முடியாமல் நின்று செல்லும் அவலநிலை உள்ளது. இதே போன்று ஒரு சில பஸ்சில் இருக்கைகளும் முறையாகஇல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.பரமக்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு வந்த அரசு டவுன் பஸ்சில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள்சிரமப்பட்டனர். இதே போல் கிராமங்களுக்கு இயக்கப்படும் ஏராளமான டவுன் பஸ்களில் ஜன்னல் கண்ணாடி உடைந்துள்ளதால் மழைநீர் பஸ்சிற்குள் விழுகிறது. எனவே அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை