உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடை உழவுப்பணி: வயல்களில் இரைதேடி குவியும் பறவைகள்

கோடை உழவுப்பணி: வயல்களில் இரைதேடி குவியும் பறவைகள்

ராமநாதபுரம், : கோடை மழையால் ராமநாதபுரம், நயினர்கோவில் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை வயல்வெளிகள் ஓடைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதிகளில் இரைக்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன. குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை இனப்பெருக்கம் செய்வதற்காக அக்.,ல் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம்பெயர்கின்றன. இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்து நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது.குறிப்பாக தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் உள்ளது. தற்போதும் பறவைகள் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. ராமநாதபுரம், நயினர்கோவில் ரோடு, கிழக்கு கடற்கரை சாலைகளில் வயல்வெளி, ஓடைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாயிகள் சிலர் வயலை உழுது பருத்தி, உளுந்து சாகுபடிக்கு தயார் செய்துள்ளனர்.இதையடுத்து மேற்கண்ட பகுதியில் புழுக்கள், பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது. இவற்றை அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் அலைபேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ