மேலும் செய்திகள்
சிறப்பு பூஜை
20-Feb-2025
கமுதி: கமுதி அருகே காவடிபட்டி கிராமத்தில் நாகாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மங்கல இசை, வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, முதல் கால யாக பூஜை, பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.பிறகு காலை 9.30 மணிக்கு கடம் புறப்பட்டு பிறகு விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.பிறகு நாகாலம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் காவடிபட்டி, ராமசாமிபட்டி, நீராவி, கிளாமரம் பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
20-Feb-2025