உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு

திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் உள்ள ஒன்பது பிரார்த்தனை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் நேர்த்திகடனாக செலுத்திய ரொக்கம் ரூ.24 லட்சத்து 71 ஆயிரத்து 121, தங்கம் 180 கிராம், வெள்ளி 810 கிராம் இருந்தது. ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சிரஸ்தார் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முகசுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன்மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ