உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 1.200 கிலோ போதை பவுடர் ராமேஸ்வரத்தில் பறிமுதல்

1.200 கிலோ போதை பவுடர் ராமேஸ்வரத்தில் பறிமுதல்

ராமேஸ்வரம்:- - ராமேஸ்வரம் அருகே பாம்பன் முந்தல்முனை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல பதுக்கி வைத்திருந்த 1.200 கிலோ போதை பவுடரை, திருச்சி சுங்க புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதனை ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்தனர். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடுகின்றனர். சில நாட்களுக்கு முன்ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த வழக்கில் கடத்தல்காரர்கள் தப்பி ஓடியதாக தெரிவித்த சுங்கத்துறையினர், தற்போது சிக்கிய போதை பவுடரிலும் கடத்தல்காரர்களை கைது செய்யாமல் கோட்டை விட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ