உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வலையில் சிக்கிய 2 ஆமைகள் உயிருடன் கடலில் விடப்பட்டது

வலையில் சிக்கிய 2 ஆமைகள் உயிருடன் கடலில் விடப்பட்டது

திருவாடானை: தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய 2 ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது.தொண்டி புதுக்குடி ராமகிருஷ்ணன் நாட்டுப்படகில் புயல்மணி, சதீஷ், கனகராஜ், பாலமுருகன், தாய்பாசம் மீன்பிடிக்கச் சென்றனர். வலையில் 50 கிலோ எடையுள்ள கடல் ஆமை சிக்கியது.நம்புதாளை நாகேந்திரன் படகில் விஜய், உலகேஸ்வரன், பூவரசன், தேவா மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களின் வலையிலும் 50 கிலோ எடையுள்ள ஆமை சிக்கியது. இது குறித்து மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆமையை கடலில் விட அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து ஆமையை கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது.தற்போது வலையில் சிக்கிய இரண்டு ஆமைகளும் சித்தாமை வகையை சேர்ந்தது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ