உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆந்திரா, புதுச்சேரி மீனவர்கள் 4 பேர் கைது

ஆந்திரா, புதுச்சேரி மீனவர்கள் 4 பேர் கைது

ராமேஸ்வரம்: திசைகாட்டும் கருவி கோளாறால் இலங்கை எல்லைக்குள் புகுந்த ஆந்திரா, புதுச்சேரி மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் இருந்து மீனவர்கள் புதிதாக படகு வாங்கி புதுச்சேரி வந்தனர். நேற்று முன்தினம் இந்த படகில் புதுச்சேரியில் ஆந்திரா, புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் பந்தாடி பிரமானந்தம் 53, கரிநுாகராஜு 40, மற்றும் சிந்தா நாகேஸ்வரன் 49, சீனு கொப்பாடி 50, ஆகியோர் வங்க கடலில் மீன்பிடித்தனர்.அப்போது படகில் உள்ள திசைகாட்டும் கருவி கோளாறாகி அது காட்டிய திசையில் மீன்பிடித்த போது இலங்கை எல்லைக்குள் சென்றுவிட்டனர். இதனை ரேடாரில் கண்காணித்த இலங்கை கடற்படை வீரர்கள் இப்படகை மடக்கி பிடித்து மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீன்துறையினர் வழக்கு பதிந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ