மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் இருவருக்கு 2 ஆண்டு சிறை
31-Aug-2025
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28ல் மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகை பிடித்து, அதில் இருந்த மீனவர்கள் ஜஸ்டின் 56, மோபின் 20, சைமன் 53, சேகர் 30, டெனிசன் 36, ஆகியோரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 3 மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் (இந்திய மதிப்பில் ரூ. 14,500) அபராதமும், மற்றொரு மீனவர் 2வது முறையாக கைதானதால் ரூ.2.50 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.72,500) அபராதம் விதித்து விடுவித்தார். மற்றொரு மீனவரும் படகு உரிமையாளருமான ஜஸ்டின் 2வது முறையாக கைதானதால் ரூ.2.50 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். ஆனால் அபராத தொகையை உடனே செலுத்தாததால் மீனவர்களை கொழும்பு வெலிக்கடை சிறையில் போலீசார் அடைத்தனர்.
31-Aug-2025