டெட் 2ம் தாள் தேர்வில் 753 பேர் ஆப்சென்ட்
ராமநாதபுரம்: ராமநாதபுரம், பரமக்குடியில் உள்ள 23 மையங்களில் நேற்றுபட்டதாரிஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (இரண்டாம் தாள்)நடந்தது.6966 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில் 6213 பேர் தேர்வில்பங்கேற்றனர். 753 பேர் தேர்வு எழுத வரவில்லை. நேற்றுமுன்தினம் (நவ.,15) இடைநிலை ஆசிரியர்களுக்கானதகுதித் தேர்வு (முதல்தாள்) 7 மையங்களில் நடந்தது. இத்தேர்வு எழுத 1962பேர் விண்ணப்பத்திருந்தனர். 1647 பேர் தேர்வு எழுதினர், 315 பேர் பங்கேற்கவில்லை.