உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆவணி சதுர்த்தசி பூஜை நடராஜருக்கு அபிஷேகம்

ஆவணி சதுர்த்தசி பூஜை நடராஜருக்கு அபிஷேகம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆவணி சதுர்த்தசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலையில் மரகத நடராஜர் சன்னதி முன்புள்ள அபிஷேக பீடத்தில் உற்ஸவர் நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சோட, தீப, துாப ஆராதனைகளும், தாழம்பூ மாலையும் சாற்றப்பட்டது. ஏராளமான சிவனடியார்களும் பக்தர்களும் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மரகத நடராஜர் சன்னதியில் இருந்து உற்ஸவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உள்வீதி புறப்பாடு நடந்தது. சிவபுராணம், திருவாசகம் உள்ளிட்ட சிவ நாமஅர்ச்சனை உள்ளிட்டவைகளை பக்தர்கள் பாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை