விழிப்புணர்வு போர்டை மறைக்கும் விளம்பரங்கள்
திருவாடானை: திருவாடானை பஸ்ஸ்டாண்ட் முன்பு குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு போர்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டை மறைக்கும் வகையில் தனியார் நிறுவனம் சார்பில் திறப்புவிழா போன்ற பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதே போல் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டு ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். பிளக்ஸ் போர்டு வைப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.