உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ஆந்திர பெண் பக்தர் பலி

ராமேஸ்வரத்தில் ஆந்திர பெண் பக்தர் பலி

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இலவச தரிசன வரிசையில் காத்திருந்த ஆந்திர பெண் பக்தர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த அப்பாராவ் மனைவி பாக்யலட்சுமி 60. இவர் உறவினர்களுடன் நேற்று மாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய இலவச தரிசன வரிசையில் காத்திருந்தனர். பாக்யலட்சுமி திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை துாக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கோயில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ