| ADDED : பிப் 27, 2026 06:44 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் மீட்டர் கட் டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் பாபு தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்தானம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். இதில் 13 ஆண்டுகளாக உயர்த்தப் படாத மீட்டர் கட்டணத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உயர்த்த வேண்டும். சட்டவிரோத டாக்சி, மினி பஸ், பைக் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும். அரசின் ஆட்டோ செயலியை துவக்க வேண் டும். புதிய ஆட்டோகளுக்கு ரூ.10ஆயிரம் வழங்கப்படும் என்ற தி.மு.க., தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆட்டோ ஓட்டுனர் சங்க பொருளாளர் ஜெயக்குமார், துணை செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.-