உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்

காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்

திருவாடானை; தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள் ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட தால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத் துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களாக பலத்த காற்று வீசியதால் பாதுகாப்பு நலன் கருதி படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று முதல் படகு போக்குவரத்து துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை