கண்டக்டர்களுக்கு இ.டி.எம். மிஷின் பஸ்சில் சார்ஜ் ஏற்றும் வசதியில்லை
திருவாடானை: அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கண்டக்டர்களுக்கு தொடுதிரை மின்னணு டிக்கெட் கொடுக்கும் மிஷின் வழங்கப்பட்டாலும் பஸ்களில் சார்ஜ் ஏற்றும் வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர். அரசு போக்குவரத்து பஸ்களில் கண்டக்டர்களுக்கு பட்டன் மெஷினுக்கு மாற்றாக தொடுதிரை மின்னணு டிக்கெட் இயந்திரம் வழங்கபட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:தற்போது பயன்பாட்டில் உள்ள இ.டி.எம்., மெஷின்கள் பட்டன் வசதியுடன் உள்ளன. அதற்கு மாற்றாக டச் ஸ்கிரீன் இ.டி.எம்., மெஷின்கள் கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும்.மெஷினில் ஏதேனும்பழுது ஏற்பட்டால் மட்டுமே அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்க கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர். கண்டக்டர்கள் கூறியதாவது:இந்த மெஷினால் பணிச்சுமை மிகவும் குறைந்துள்ளது. பயண வழித்தடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் டவுன் பஸ் உள்ளிட்ட சில பஸ்களில் சார்ஜ் ஏற்றும் வசதியில்லை. இதனால் உணவு இடைவேளையின் போது ஆங்காங்கே சார்ஜ் ஏற்றிக் கொள்கிறோம்.அனைத்து பஸ்களிலும் இ.டி.எம். மெஷினுக்கு சார்ஜ் ஏற்றும் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்றனர்.