உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி

சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சைக்கிளில் சென்றவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.ராமநாதபுரம் புளிக்கார தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 55. இவர் பழக்கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன் தினம் (ஏப்.15)இரவு 10:00 மணிக்கு வேலையை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.கீழக்கரை ரோடு ரயில்வே பாலம் அருகில் ராமேஸ்வரம் செல்லும் ரோடு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். நகர் போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ