உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடரும் சூறாவளி 6ம் நாளாக பாம்பன் மீனவர்களுக்கு தடை

தொடரும் சூறாவளி 6ம் நாளாக பாம்பன் மீனவர்களுக்கு தடை

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் தொடர்ந்து சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆறாவது நாளாக மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து மன்னார்வளைகுடா, வங்கக்கடலில் சூறாவளி காரணமாக கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இச்சூழலில் மீன்பிடிக்க சென்றால் மீனவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அக்.,19 முதல் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் ஆறாம் நாளான நேற்றும் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பால் இப்பகுதி மீனவர்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் 750 விசைப்படகுகள், 300 நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை