உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் தீபாவளி பண்டிகையில் கோலாகலம்

பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் தீபாவளி பண்டிகையில் கோலாகலம்

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி பக்தர்கள் நாள் முழுவதும் சுவாமி தரிசனம் செய்தனர். பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 6:00 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் ஏகாந்த சேவையில் அருள்பாலித்தார். பக்தர்கள் புத்தாடை அணிந்து தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.மேலும் பரமக்குடி சுந்தர் நகர், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் அருள்பாலிக்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்கார சேவையில் அருள்பாலித்த நிலையில் உற்ஸவர் ஏகாந்த சேவையில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை முதல் மாலை வரை பக்தர்கள் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி