ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்
ராமேஸ்வரம்:ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.ஐப்பசி அமாவாசை, தீபாவளி தொடர் விடுமுறையால் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் செய்தனர். பின் கடலில் புனித நீராடினர்.பின் கோயில் வளாகத்தில் 22 தீர்த்தங்களில் வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். தொடர்ந்து கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசித்தனர். ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேல வாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.