உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்

சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்

ராமேஸ்வரம் : சித்திரை அமாவாசையையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நேற்று பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.பின் கோயில் வளாகத்திற்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி விட்டு சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கழிவுநீர் கலப்பு

அக்னி தீர்த்த கடற்கரை அருகில் உள்ள பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி அக்னி தீர்த்தத்தில் நேரடியாக கலந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.வேறு வழியின்றி வேதனையுடன் பக்தர்கள் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி சென்றனர். அமாவாசை, விடுமுறை போன்ற கூட்ட நெரிசல் நாட்களில் இது தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி