உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நல்லிருக்கையில் நாய் தொல்லை

நல்லிருக்கையில் நாய் தொல்லை

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை ஊராட்சியில் வெறிநாய்கள் கூட்டமாக சுற்றித் திரியும் நிலையில் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்களை விரட்டி கடிக்கிறது.இதனால் காயமடைந்தவர்கள் உத்தரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் வெறிநாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்பாடில்லாத நிலையில் உள்ள ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள ஆர்.ஓ., பிளான்ட் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. எனவே கிராம மக்களின் நலன் கருதி ஆர்.ஓ., பிளான்டை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை