உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புயல் கரை கடந்ததால் மீனவருக்கு மீன் பிடிக்க இன்று அனுமதி

புயல் கரை கடந்ததால் மீனவருக்கு மீன் பிடிக்க இன்று அனுமதி

ராமேஸ்வரம்: புயல் கரை கடந்ததால் 8 நாட்களுக்கு பிறகு இன்று (டிச., 2) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளித்தனர்.வங்க கடலில் உருவான புயலால் நவ., 24 முதல் தமிழக கடலோரத்தில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சத அலைகள் எழுந்தன. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது சிரமம் என்பதால் அன்று முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.இந்நிலையில் புயல் கரை கடந்ததால் மீனவர்களுக்கு புயல் அச்சம் நீங்கியது. இதனால் 8 நாட்களுக்கு பிறகு இன்று(டிச.,2) ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதி டோக்கன் வழங்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து டிச., 3 முதல் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கும் பாம்பன், மண்டபம் தெற்கு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி