உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்களுக்கு ஜன. 7 வரை சிறைக்காவல் * இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மீனவர்களுக்கு ஜன. 7 வரை சிறைக்காவல் * இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம்: டிச., 8 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் 2 விசைப்படகுகள், அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். நீதிமன்ற வாய்தா நாளான நேற்று மீனவர்களை போலீசார் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2025 ஜன.,7 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மீனவர்களை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் போலீசார் அடைத்தனர். தொடர்ந்து 18 நாட்களாக சிறையில் வாடிய மீனவர்களை விடுவிக்காத நிலையில் மீண்டும் சிறையில் அடைத்த தகவல் மீனவர்களின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ