பெருமாள் கோயிலில் கருட சேவை
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆனி சுவாதி நட்சத்திர கருட சேவை நடந்தது. பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்ஸவங்கள் நடக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பெருமாள் கருட சேவையில் எழுந்தருளினார். 10வது ஆண்டு ஆனி சுவாதி நட்சத்திர புறப்பாடு நடந்தது. திருவீதி உலா வந்த பெருமாளுக்கு ஏராளமானோர் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். திருவாடானை: திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயணபெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில்களில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது. மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.